மட்டக்களப்பில் ஐவரை கைது செய்தது பொலிஸ்! கைத்துப்பாக்கி வைத்திருந்தனராம்!

police 1
police 1

மட்டக்களப்பில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்புத்தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியன்காடு பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது முதலில் துப்பாக்கி மற்றும் தோட்டகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்லடி, மட்டக்களப்பு, இலுப்படிவேனை மற்றும் கருவப்பன்கேனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 39-45 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 10 தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.