இரண்டு சிறுபான்மை உறுப்பினர்களைப் பெற ஒன்றிணைவோம்!

unnamed 21
unnamed 21

“நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வாக்களித்தத் தகுதிபெற்ற சிறுபான்மை மக்கள் ஒரு இலட்சத்து (75) ஆயிரம் பேர் உள்ள நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் சிந்தித்துச் செயற்பட்டால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை தொகுதியில் கல்லொளுவைக் கிராமத்தில் முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சட்டத்தரணி நியாஸ் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:-

“நாட்டிலுள்ள (22) தேர்தல் மாவட்டங்களில் அதிகூடிய வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் (18) இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஒரு இலட்சத்து (75) ஆயிரத்துக்கும் கூடுதலான சிறுபான்மை வாக்குகள் உள்ளனர். (56) ஆயிரம் இந்து, கத்தோலிக்க சமூகங்களின் வாக்குகளும், ஒரு இலட்சத்து (25) ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும் உள்ளன.

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு சிந்தித்துச் செயற்பட்டால் எம்மால் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க முடியும்.

கடந்த காலங்களில் நாம் பிரிந்து செயற்பட்டதன் காரணமாக எமக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது போனமை துரதிஷ்டவசமானதாகும்” – எனறு தெரிவித்துள்ளார்.