தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநில ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தீவிர நிலைமை குறித்தும் அதனைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆளுநரிடம் எடுத்துரைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் கொலைச் சம்பவம் தொடர்பாகவும் அதுகுறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் முதல்வர் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.