சற்றுமுன்பு நடந்த விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானார்.
வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகே இருந்த நாவல் மரத்தில் மோதியதால் இவ் விபத்து நிகழ்ந்து என அவரோடு மோட்டார் சைக்கிளில் இருந்து வந்தவர் கூறியுள்ளார். அவர் சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் சடலம் தற்போது அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது