தமிழ்நாட்டு சோதனைச்சாவடியி ஒன்றில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்!

Money
Money

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச்சாவடியில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் சோதனைச்சாவடியில் தமிழக பதிவு எண் கொண்ட காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி ஆந்திராவில் இருந்து எடுத்து வரப்பட்ட ரூ.1 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக 3 பேரை பிடித்து தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான தகவல் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.