கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் ஜூலை 8ந்தேதி முதல் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து குணமடைந்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.