கண் பார்வை குறைய இதுதான் காரணமா?

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 13
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 13

இன்றைய காலக்கட்டத்தில் டிவி முன் நேரம் செலவழிப்பதை விட சிமார்ட் போனுடன் நேரம் செலவழிப்பதே அதிகமாக இருக்கின்றது.

இதற்கு காரணம் ஸ்மார்ட்போன், மடிக்கணனி கணனி, போன்றவைகள் தான். எந்நேரமும் இவற்றில் உள்ள எழுத்துக்கள் மற்றும் படங்களை கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதால், கண்கள் விரைவில் சோர்ந்து நாளடைவில் பார்வை மங்கலாக ஆரம்பிக்கும்.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் பலர் உடனே மருத்துவரிடமும் செல்லமாட்டார்கள். அதே சமயம், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் சாப்பிடுவது கிடையாது. அதற்கான கண் பயிற்சிகளையும் செய்வதில்லை.

இது இப்படியே நீடித்தால், பின் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி போடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.

இதற்கு முக்கியமான சில காரணங்களை பற்றி பார்ப்போம்

  • குழந்தைக்கு தாய்ப்பால் சரியாக கொடுக்காவிட்டால் குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படும்.
  • இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்வர்களுக்கு கண் பார்வை குறையும் ஆபத்து உள்ளது.
  • மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறைய வாய்ப்பு இருக்கிறது. உடல் கழிவுகள் சரியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.
  • உடலுக்குத் தேவையான நீர் அருந்தாவிட்டால் கண் பார்வை குறையுமாம்.
  • பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறைய வாய்ப்பு உள்ளது.
  • அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறைய வாய்ப்பு இருக்கிறது.
  • மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளை ஏற்படும். கண் பார்வையும் குறைய இதுகூட ஒரு காரணமாக அமையலாம்.