தென்னிந்திய திரையுலகத்தில் நீண்டகாலமாக கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா, ஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் நடிக்க உள்ள படத்திலும் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மேலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் திரிஷா நடிக்க உள்ளதாகவும் ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு த்ரிஷாவுக்குக் கிடைத்துள்ளது.