மலையாளத்தில் ஆர்வம் காட்டும் அருவி பட நாயகி

Aditi Balan
Aditi Balan

அருவி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை அதிதி பாலனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. அறிமுகமாகி முதல் படத்திலேயே எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார்.

இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற அருவி வசூலையும் வாரிக்குவித்தது.

அதன் பிறகு, தமிழில் அவருக்கு பல வாய்ப்புகள் வந்தும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக `படவெட்டு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் லிஜூ கிருஷ்ணா என்பவர் இயக்க, நடிகர் சன்னி வெய்ன் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதைத் தொடர்ந்து அதிதி பாலன் மற்றொரு மலையாள படத்திலும் நடிக்கவிருக்கிறார். கணவன் – மனைவி உறவை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்தப் படத்தை `சென்னையில் ஒரு நாள்’ படத்தை இயக்கிய ஷாகித் காதர் இயக்குகிறார்.

குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் முதலில் ஒப்பந்தமாகிய நித்யா மேனன் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியதைத் தொடர்ந்து அதிதி பாலன் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.