உயிருக்கு போராடும் பரவை முனியம்மா

paravai muniyamma
paravai muniyamma

நாட்டுப்புற பாடகியான பரவை முனியம்மா (வயது 85) 2003ல் வெளியான ‘தூள்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தில் அவர் பாடிய “சிங்கம் போல” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவை முனியம்மா பிரபலமானார்.

80 இற்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ள பரவை முனியம்மா இறுதியாக மான் கராத்தே படத்தைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படவாய்ப்புகள் குறைந்தன.

உடல் நலக்குறைவால் பரவை முனியம்மா அவதிப்பட்டு வருவதை அறிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் வைப்பு நிதி வழங்கினார்.

அதன் மூலம் மாதந்தோறும் ஆறாயிரம் ரூபா கிடைத்து வருகிறது. எனினும் அந்த தொகை மருத்துவ செலவுக்கு போதுமானதாக இல்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பரவை முனியம்மாவின் உடல் நிலை மோசமடைந்தது.

மதுரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதயம், நுரையீரலிலும் நீர்கட்டி இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் கூறினர். ஆனால் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் பரவை முனியம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதாக மகள்கள் தெரிவித்தனர்.

தற்போது நோயால் படுத்த படுக்கையாக கிடக்கும் பரவை முனியம்மா காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அரசும், சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் உதவ வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.