சுஜித் உயிரிழப்பு – ஜி.வி.பிரகாஷ் வருத்தம்

gv
gv

திருச்சி மணப்பாறை அருகே 25ம் திகதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்பதற்கு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்காத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்,

‘ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நமது பொறுப்பற்ற செயலால் ஏற்படும் “பேரிழப்புகளை” நியாயப்படுத்துகிறோம், தப்பித்துக்கொள்கிறோம். உபயோகமற்ற ஆழ்துளை கிணறுகளை மூட போர்கால அடிப்படையில் அரசும், தனி மனிதர்களும் முயற்சி எடுக்க வேண்டும் #SorrySujith #RIPSujith’ இவ்வாறு அவர் பதிவு செய்திருக்கிறார்.