கொரோனா வைரசிற்கு பொதுமக்கள் மீதும் ஊடகங்கள் மீது அரசாங்கம் பழிபோடுகின்றது என்கின்றது ஜே.வி.பி !

161 720x450 1
161 720x450 1

கொரோனா வைரசிற்கு பொதுமக்கள் மீதும் ஊடகங்கள் மீது அரசாங்கம் பழிபோட முயல்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலிற்கான பெரும் பொறுப்பை அரசாங்கமே ஏற்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான இருக்கமான திட்டங்கள் இல்லாததன் காரணமாக பொதுமக்கள் பெருமளவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தருணத்தில் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ள அவர் தற்போதைய நிர்வாகம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கும் பொருளாதாரத்தினை நிர்வகிப்பதற்கும் தவறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிற்கு சலுகைகளை வழங்குதவற்கு பதில் அரசாங்கம் தொழில்முனைவோருடன் இணைந்துகொண்டு இந்த இக்கட்டான தருணத்தில் இலாபம் சம்பாதிக்க முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.