விஷ வாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி-பழனிசாமி

edappadi palanisamy 660
edappadi palanisamy 660

தூத்துக்குடி மாவட்டத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், தூத்துக்குடி செக்காரக்குடி கிராமத்தில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்றபோது, நான்கு பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு போ்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.