கட்சித் தலைவரை தீர்மானிக்கும் கூட்டத்திலிருந்து ரணில் வெளிநடப்பு!

ranil wickramasinghe
ranil wickramasinghe

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேற்றைய (16) கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட்டத்தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் கட்சித்தலைவரை தீர்மானிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் 65 பேரில் 52 பேர் சஜித்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ள அதேவேளை வாக்கெடுப்பு ஒன்றிற்கு செல்ல ரணில் தரப்பு மறுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக சிலரும் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை கட்சி நிறைவேற்று குழு கூடி தலைவரை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.