கல்முனை பேருந்து தரிப்பிடத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

kalmunai0
kalmunai0

கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பொதுப் பேருந்து தரிப்பிடத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்முனை அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த பேருந்து தரிப்பு நிலையமானது இதுவரைகாலமும் “எட்டாக்கனியாகவே” இருந்து வருகிறது.

இது தொடர்பில் இது தொடர்பில் அரசியல் தலைமைகள், நிருவாக உத்தியோகத்தர்கள் பாராமுகமாக காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே புதிய அரசாங்கம் இதனை பார்வையிட்டு மிக விரைவில் செப்பனிட்டு தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.