கைதடி பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு வீரவன்ச வருகை

7196e1d3 1353 4f57 8192 3b63f5819cca
7196e1d3 1353 4f57 8192 3b63f5819cca

வடக்குக்கு வருகை தந்துள்ள அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்.கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிலையத்தை நேற்று (17) பிற்பகல் பார்வையிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ச,

“தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுதருவதாக ஆட்சிபீடம் ஏறிய முன்னைய அரசு சம்பந்தனுக்கு வீட்டையே பெற்றுக்கொடுத்தது. தமிழ் மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்துகொடுக்கப்படவில்லை.

நான் நாடாளுமன்றம் சென்று 20 வருடங்கள் ஆகின்றது.சம்பந்தன் அன்று கூறியதையே இன்றும் கூறுகின்றார்.

விக்கினேஸ்வரன் நீதியரசராக இருக்கும்போது ஒருமாதிரியாகவும் முதலமைச்சர் ஆனபிறகு இன்னொரு மாதிரியாகவும் இருக்கிறார்.அவர் இனவாதத்தை தூண்டுவதைத் தவிரவேறொன்னும் செய்யவில்லை” என தெரிவித்தார்.