வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (19) காலை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை குறித்த மூவரும் காணாமல் போயிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸாரும், ஊர் மக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து இன்று காலை மூன்று சிறுவர்களும் ஆலய மண்டபத்தில் உறக்கத்திலிருந்த நிலையில் மீட்கப்பட்டனர்.