தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா

9
9

தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மற்றும் பண்பாட்டு பெருவிழா, இணைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

“உறவுகளின் ஒரு பிடி அரிசியில் உரிமைப் பொங்கல்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (19) நடைபெற்றது.

108 பொங்கல் பானைகளை வைத்து இவ் பொங்கல் விழா சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இவ்விழாவில் வெளிநாட்டவர்கள் உட்பட யாழ் பல்கலைக்கழக மாணவர், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், வடகிழக்கு மற்றும் மலையக இளைஞர் யுவதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.