பூஜித் , ஹேமசிறி விளக்கமறியல் நீடிப்பு

1 wer
1 wer

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த இருவரையும் பெப்ரவரி 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குறித்த இருவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.