ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் கூட்டணிப் படைகளை வெளியேறுமாறு கோரி பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று(24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஈராக் ஷியா மதகுரு முக்தாதா அல் சதர் தலைமையில் ஆயிரக் கணக்கானோர் பக்தாத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.