பிரமந்தனாறில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் பலி!

0 d
0 d

கிளிநொச்சி பிரமந்தனாறு மயில்வாகனபுரத்தில் இன்று (25) இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு.

ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் – மனைவியை கணவன் வெட்டி கொலை செய்துள்ளார்.

வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

இச் சம்பவத்தின் போது சுகந்தன் சகுந்தலா(வயது 25) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு அவரின் உறவினரான யுவதி காயமடைந்துள்ளார்,

குறித்த நபர் தன்னைத் தானே கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவரும் யுவதியும் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வாழ்ந்த வந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பில் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.