சாரதியின் நித்திரை கலக்கத்தால் ஏற்பட்ட விபத்து

accident 2
accident 2

அனுராதபுரம்-குருநாகல் பிரதான வீதியில் ஏரியாகம சந்தியில் நேற்று (24) இரவு வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

மகிழூர்தி ஒன்று பாரவூர்தியுடன் மோதுண்டதன் காரணமாக மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மகிழூர்தியில் பயணித்த தாய் மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில் தம்புத்தேகம மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரவூர்தியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.