எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை விளக்கவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்

sajith resign
sajith resign

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாளை (26) தனது எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை விளக்கவுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், நாட்டுக்காக மேற்கொள்ளப் போகும் திட்டங்கள் தொடர்பில் சஜித் அறிவிக்க உள்ளார்.

இதேவேளை கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும் போது சஜித் பிரதமரானால் ஆட்சியை நடத்திச் செல்லமுடியாது. ரணில்-மைத்திரி ஆட்சியைப் போலவே இருக்கும் என்ற கருத்தை மறுத்த அஜித் பெரேரா தனிப்பட்ட எண்ணங்களின் செல்வாக்கு காரணமாகவே அந்த ஆட்சி சிறப்பு பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது.