புதிய விகாரைகளை அமைக்க துரித நடவடிக்கை – பிரதமர்

mahinda0
mahinda0

இலங்கையில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட வேண்டிய பகுதிகளை இனம்கண்டு அவற்றை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளளார்.

ஹொரவத்பொத்தான குடாகம பகுதியில் விகாரை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

´1000 விகாரைகள் நாட்டில் உள்ளன. அவற்றில் பெரும்பாலான விகாரைகளில் பிக்குகள் இல்லை. இந்த நிலைமை பிரச்சினைக்குரியதாகும்.

என்னுடன் விளையாட குடும்பத்தில் 9 பேர் இருந்தனர். ஆனால் இன்று அவ்வாறு இல்லை ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மாத்திரமே உள்ளனர்.

முன்பு துறவிகளாவதற்கு, யுத்தம் புரிவதற்கு, விவசாயம் செய்வதற்கு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் இன்று இவற்றுக்கு அனுப்ப மக்கள் மத்தியில் பிள்ளைகள் இல்லை.

இந்த நிலைமை குறித்து பௌத்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.