மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை

rtt
rtt

நாட்டில் வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை விடுத்துள்ளது.

மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

“வறட்சியுடனான வானிலையால் நாளாந்த நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது நாளாந்தம் 5 வீத நீர்மின் உற்பத்தியே முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 69 வீதமாக காணப்படுவதாகவும், சுலக்‌ஷன ஜயவர்தன கூறியுள்ளார்.

காசல் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 53 வீதமாகவும், மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 63 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 54 வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 79 வீதமாகவும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே, நாட்டில் வறட்சியான வானிலை தொடர்வதால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு, கோரிக்கை விடுத்துள்ளது.