ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

6 ji
6 ji

இடைக்கால கொடுப்பனவை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி சுகயீன விடுமுறையின் கீழ், இன்று ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே பரிசீலிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர், ஆ.ர்.ஆ. சித்ரா நந்த தெரிவித்துள்ளார்.