உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வரே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வைத்து அவர்கள் நால்வரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் முன்னெடுத்த தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சி4 வெடிமருந்தின் வீரியத்துக்கும் குறைந்தளவான 856 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டன. அத்துடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மூவரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படும் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
Home செய்திக்குரல் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்களுடன் நால்வரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்!
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.