கொரோனா பயம் வேண்டாம் – அஷ்வந்த்

i3 15
i3 15

யார் யாரெல்லாம் எப்படி எப்படியெல்லாம் முடியுமே அப்படியெல்லாம், கொரோனா வைரஸ் தடுப்புத் தொடர்பாக மக்களுக்கு திவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கின்றனர்.

அந்த வகையில், சூப்பர் டீலக்ஸ், காட்பாதர் உள்ளிட்ட பல படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் அசோக் குமார்.

கொரோனா தொற்று குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், ‛‛அதிகமான மக்கள் நெருக்கம் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல். பாதுகாப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்.

கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். ஹேண்ட் சானிடைசரை கொண்டு, அவ்வப்போது கைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இதுபோல சுகாதாரத் துறை சொல்லியிருக்கும் எல்லா விஷயங்களையும் பின் பற்ற வேண்டும் என பதிவிட்டார்.