இலங்கையில் களியாட்ட விடுதிகளுக்கும் பூட்டு!

images 1 5
images 1 5

உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விடுதி , பந்தையம் பிடிக்கும் விடுதிகளை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய இடங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கூடுவதனால் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.