கொழும்பு, கம்பஹா, களுத்துறை கொரோனா அச்சுறுத்தல் வலயம்

6 gg
6 gg

மேல் மாகாணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமுள்ள பகுதிகளாக அரசு பிரகடனம் செய்துள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் மறு அறிவிப்பு வரும்வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

கொழும்பு, கம்பஹாவில் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்குச் சட்டம்  தளர்த்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வசதியேற்படுத்தப்பட்டது.

எனினும், அங்கு அலைமோதிய மக்கள் கூட்டம், கொரோனா வைரஸ் தடுப்புக்குப் பாதகமாக அமைந்தது என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.