முன்னாள் விமானப் படைத் தளபதி மேல் மாகாண ஆளுநராக நியமனம்

4 rrr 1
4 rrr 1

மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேல் மாகாண ஆளுநராகப் பணியாற்றிய சீதா அரம்பேபொல ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சிபாரிசு செய்யப்பட்டதால் பதவி விலகியிருந்தார். இதையடுத்து இந்தப் பதவியில் ரொஷான் குணதிலக அமர்த்தப்பட்டுள்ளார்.