இலங்கை மக்களுக்கு இணைய வசதிகளை முடிவுமானளவு வரையறையின்றி வழங்க நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், கொவிட் 19 செயலணியின் தலைவருமான பஷில் ராஜபக்ஷவிற்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (6) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் டயலொக், மொபிடெல், ஹச், ஏயார் டெல், எஸ்.எல்.டி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளும், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொவிட் 19 பிரச்சினை வலுவடைந்து வருகின்ற நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இச் சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டணம் செலுத்தப்படாத தொலைபேசி இணைப்புகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் நாள் வரை துண்டிக்கப்படாது என இந்த சந்திப்பின் போது தொலைபேசி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.