தற்போதய சூழ்நிலை காரணமாக கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தினை மீள் அறிவித்தல் வரை மூடுமாறு மத்திய நிலையத்தின் சங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து இன்று (7) இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போது இத் தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்காக இத் தீர்மானம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.