T10 தொடரில் விளையாடவுள்ள அஞ்சலோ மத்யூஸ்

mathews
mathews

அபுதாபியில் இடம்பெறவுள்ள T10 தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மத்யூஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

டெல்லி புல்ஸ் அணிக்காக இலங்கை அணியின் சகலதுறை வீரரான அஞ்சலோ மத்யூஸ் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் நபி மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் உள்ளிட்ட சர்வதேச வீரர்களுடன் அஞ்சலோ மத்யூஸ் இணைக்கப்பட்டுள்ளதாக குறித்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளமிங் தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி புல்ஸ் அணிக்காக இலங்கை அணியின் குசல் ஜனித் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.