தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம்!!

4 ju
4 ju

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவு வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் உரிய நடைமுறைகளை பூர்த்தி செய்ய அதிக நேரம் தேவைப்படும் எனவும், அத்துடன் அதிக வாக்குகளும் போடப்படும் என எதிர்பார்க்கப்படுவதனால் தேர்தல் முடிவுகளை வெளியிடும் நேரத்தை சரிவர கூறமுடியாதுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது முடிவு அறிவிக்கப்படும் நேரம் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தெரிவிக்க எடுத்த நேரத்தை விட இம்முறை முடிவுகளை அறிவிக்க  அதிக நேரம் எடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.