ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பாளர் மு.தம்பிராசா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்த சென்ற வேளை, இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மு.தம்பிராசா குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர் கடந்த காலங்களிலும் மகனைக் கடத்தியதாக நாடகமாடி பொலிசாரிடம் சிக்கியவர் மகனை கொழும்பில் அடைத்து வைத்தவர் என பின்னர் தெரியவந்தது.
இப்படியாக பல சித்து வேலைகளில் ஈடுபடும் இவர் தாக்குதல் இடம் பெற்று முறைப்பாடு பதியும் போது எப்படி செல்பி எடுக்க முடியும் அது முழுமையாக சாத்தியமில்லை அப்படி இருக்கையயில் தம்பி என அழைக்கப்படும் தம்பிராசா மீதான தாக்குதல் போலி என நிரூபனமாகிறது.