ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியினை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாறுப்பட்ட வழிமுறைகளில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆரம்பத்தில் இருந்து உதவி வழங்கியவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.
அச்சமின்றிய விதத்தில் அனைவரும் தேசிய பாதுகாப்புடன் வாழும் சூழல் இனி தோற்றுவிக்கப்படும். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அதற்காக செயற்படுவார் என்றும் வெற்றியினை அடைவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தொடர்ந்து அவசியமாக காணப்படுகின்றதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வெற்றியின் பின்னர் பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.