யாழ் வலம்புரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் இராஜேஸ்கரனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது நேற்றைய தினம் (19) மாலை இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் வீட்டின் நுழைவாயில் மற்றும் கதவு என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதன் பின்னர் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
கடந்த மாதம் குறித்த ஊடகவியலாளரது வீட்டின் முன்பாக அமைந்துள்ள மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஊடகவியலாளர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.