வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் நேற்று இரவு(21) முச்சக்கர வண்டியும், பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த குடும்ப பெண் ஆகியோர் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
6 Attachments