185 ஆக அதிகரித்துள்ள கொரோனா தொற்று!

2 f 1
2 f 1

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (07) நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 185 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலையில் 137 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன் 255 பேர் தற்போதும் வைத்தியசாலையில் சந்தேகத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று (7) மாத்திரம் தற்போதுவரை 7 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொரோனா தொற்றினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 42 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.