எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷவினை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினால் தோற்கடிக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளது.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியால் மட்டுமே கோத்தாபய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.