யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இனம் தெரியாத மர்மக் கும்பல் மேற்கொண்ட கத்திக் குத்து தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் நேற்றையதினம் இரவு (26) உரையாடிக்கொண்டு நின்றுள்ளனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மக் கும்பல் ஒன்று அங்கு நின்றவர்கள் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதனால் இருவர் வயிற்றிலும் முதுகிலும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.