அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெப்பநிலை உயர்வு மற்றும் மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவாக காணப்படுகின்றமையினால் அடுத்து வரும் நாட்களில் நிலைமை மோசமடையும் என கூறப்படுகிறது.
தீயணைப்புப் படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 300 இற்கும் அதிகமான வீடுகள் தீயில் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.