பாதுக்கை பிரதேசத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றினை அமைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிருவாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் இலங்கை தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஒன்றான ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகியன இணைந்து பாதுக்க பகுதியில் புதிய கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் மைதானத்தில் உள்ளூர் போட்டிகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச அணிகளுக்கு இடையிலான போட்டிகளும் நடத்தப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது