காங்கேசன்துறை சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் குடை சாய்ந்தது

IMG 20201219 WA0002
IMG 20201219 WA0002

காங்கேசன்துறையில் தனியார் விடுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து விழுந்துள்ளது.

குறித்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான அவதானிப்புகள் பெறப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு யாழில் நிலவிய மழையுடன் கூடிய அசாதாரண காலநிலையின் தாக்கத்தின் காரணமாக குறித்த கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் காங்கேசந்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.