வடமாகாண ஆளுனர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுனராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி தே.அரவிந்தன் யாழ்ப்பாணம் , வவுனியா மாவட்டங்களில் விசேட சத்திரசிகிச்சை வைத்தியராக பணியாற்றிய நிலையில் தற்போது கொழும்பில் பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.