போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!

kaithu

ஹோமாகம பிட்டிபன பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 20 கைப்பற்றப்பட்டுள்ளதோடு, நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய இயந்திரங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.