யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil News large 2558961 1
Tamil News large 2558961 1

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மருதனார்மட கொரோனா கொத்தணியின் எண்ணிக்கை 105ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.