மட்டக்களப்பு ஏறாவூர் காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு இன்று புதன்கிழமை (30) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 4 காவல்துறையினருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதையடுத்து காவல்துறை நிலையத்தை தற்காலிகமாக இன்று பூட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
ஏறாவூர் காவல்துறையினருக்கு நிலையத்தில் கடமையாற்றும் 103 பேருக்கு இன்று புதன்கிழமை (30) திகதி சுகாதார அதிகாரிகள்காவல்துறை நிலையத்தில் வைத்து மேற்கொண்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 4 பொலிசாருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது
இதனையடுத்து குறித்த பொலிசாரை வைத்தியசாலைகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய காவல்துறையினரை தனிமைப்படுத்தப்படுத்தலுக் குள்ளாக்கியுள்ளதுடன் காவல்துறைநிலையத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்