சிவசேனாவின் அதிரடி உத்தரவு!

1 sivasena
1 sivasena

மஹராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என சிவசேனா சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மஹராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அங்கு ஆட்சியமைப்பதில் இழுப்பறி நிலை நீடித்தது.

இந்நிலையில் பா.ஜ.க – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகள் எதிர்பாராத விதமாக ஆட்சியை கைப்பற்றின.

தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தாக்கல் செய்தன.

இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் நாளை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.